Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒருகோடி ரூபாய் செலவில்மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் மக்களுக்கு திறந்து வைப்பு

அக்டோபர் 16, 2020 09:03

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில், ஒருகோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தமுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில், முடிவுற்ற வளர்ச்சிப்பணிகளான,  தலா 8 லட்ச ரூபாய் மதிப்பில், சேரன்மகாதேவி, கூனியூர், மூலச்சி ஆகிய இடங்களில், கட்டி முடிக்கப்பட்டுள்ள, அங்கன்வாடி மையங்கள், அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றின் அருகில், தலா 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடங்கள்.

8 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள  அதி நவீன  உயர் கோபுர மின் விளக்குகள், விக்ரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பசுகடைவிளை பகுதியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடை,  பாபநாசம் அருள்மிகு பாபனாச சுவாமி திருக்கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், 57 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர்பிளாக் செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகள் என, சுமார் ஒருகோடி ரூபாய் மதிப்பில், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளை,  மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்   திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன், சேரன்மகாதேவி வருவாய் வட்டாட்சியர் வெற்றிச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியர் சரவணன், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய செல்வி, முத்துகிருஷ்ணன்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, உதவி செயற்பொறியாளர் சுகந்தி, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர், கூனியூர் ஊராட்சி செயலாளர் சிவன் பாண்டி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்